சென்னை

பாமக நாளை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.  10 பா.ம.க. வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர். நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட உள்ளது.

இன்று பா.ம.க. செய்தித்தொடர்பாளர் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”பா.ம.க.வின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாசும், கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் கலந்துகொண்டு பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.