சென்னை

நாளை பெருங்களத்தூர் மேம்பாலத்தை அமைச்சர் தா மோ அன்பரசன் திறந்து வைக்கிறார்.

பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே இணைந்து ரூ.234 கோடியில், மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  சென்ற வருடம் செப்டம்பரில் ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022, செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

அதன் பிறகு  ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலூர் மார்க்கமாக பணிகள் நடந்து வருகின்றன. பாலப்பணிகளில் மற்றொரு புறத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து, பீர்க்கன்கரணை சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன.

இந்தப் பணிகள் முடிந்து, சில வாரங்களாகியும் இப்பாதை திறக்கப்படாமல் இருந்ததால் மக்களிடம் எதிர்ப்பு எழுந்தது. எனவே பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மற்றொரு பகுதி நாளை (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு சீனிவாசா நகர் பாதையை, மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைக்கிறார்.