கன்னியாகுமரி

நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பராசக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் உள்ளன. அதைப்போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக உள்ளது. சிவராத்திரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானைப் பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

நடப்பாண்டில்  நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (மார்ச் 9) காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம் ஆகும். நாளை இரவு கண் விழிப்பது மிக அவசியமாகும். மேலும். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.  நாளை சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்  பி.என்.ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய விடுமுறைக்கு ஈடாக வருகிற 23 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.