சென்னை

நாளை சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் 47 ஆம் புத்தக காட்சியைத் தொடக்கி வைக்க உள்ளார். 

நாளை முதல் 21 ஆம் தேதி வரை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

நாளை புத்தகக் காட்சியை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மேலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.