சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 222 பேரும் கோவையில் 226 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,745 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,52,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,427 பேர் உயிர் இழந்து 25,99,567 பேர் குணம் அடைந்து தற்போது 17,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 222 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,48,514 பேர் பாதிக்கப்பட்டு 8,458 பேர் உயிர் இழந்து 5,37,951 பேர் குணம் அடைந்து தற்போது 2,105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 226 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,41,143 பேர் பாதிக்கப்பட்டு 2,322 பேர் உயிர் இழந்து 2,36,676 பேர் குணம் அடைந்து தற்போது 2,145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,67,957 பேர் பாதிக்கப்பட்டு 2,463 பேர் உயிர் இழந்து 1,64,311 பேர் குணம் அடைந்து தற்போது 1,183 பேர் சிகிச்சையில் உள்ளனர்.