ராய்ப்பூர்

ன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார்.

கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 3  ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் வென்றது. எனஏ பாஜக ஆட்சியமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இன்று பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் மத்திய கண்காணிப்பாளர்களான சர்பானந்தா சோனோவால் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் ராய்ப்பூரில் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

கூட்டத்தில் வடக்கு சத்தீஸ்கரில் குன்குரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற விஷ்ணு தியோ சாய் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று சத்தீஸ்கரின் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றுக் கொண்டார்.

விஷ்ணு தியோ சாய் பழங்குடியின தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவர் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர். கடந்த 2020 முதல் 2022 ஆண்டு வரையில் அந்த கட்சியின் மாநில தலைவராகப் பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.