சென்னை

ன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி டில்லி சென்றுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவால் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்று இருக்கும் பொன்முடிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று இதற்கான பதவிப்பிரமாணத்தைச் செய்து வைக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநருக்கு நேற்று பரிந்துரை அனுப்பியிருந்தார்.

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். அவர் டில்லி பயணத்தை முடித்து விட்டு 16 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக டில்லி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளதால், பொன்முடி அமைச்சராகும் தேதி சற்று தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

வரும் 16-ந் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அவ்வாறு தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில், அமைச்சராக பொன்முடியை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.