சென்னை

ன்று தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது

ஆண்டுதோறும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

இதையொட்டி பேரவை விதி எண்ணில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி அன்று  உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கடந்த 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . முதல் முறையாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அப்போது நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கடந்த 20ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது   வேளாண் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.

இன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. தொடரி நிறைவு நாளில் பொது பட்ஜெட்  மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.