சென்னை

குருவாயூர் – எழும்பூர் உள்ளிட்ட விரைவு ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. 

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”நெல்லை – மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று, 25-ந்தேதி மற்றும் 27 ஆம்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்.20683) மாற்றுப்பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாகச் செங்கோட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை), 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் விரைவு ரயில் (20684) தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும். 

சென்னை சென்டிரலில் இருந்து நாளை இரவு 7 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (12689) மாற்றுப்பாதையாக சேலம், ஈரோடு, திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 25-ந்தேதி இரவு 7.35 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (12690) மாற்றுப்பாதையாக திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை சென்டிரல் வந்தடையும். 

குருவாயூரில் இருந்து 27 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் (16128) மாற்றுப்பாதையாக திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ரயில் (12665) மாற்றுப்பாதையாக திருச்சி, கரூர், ஈரோடு, போடனூர், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.