சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

“இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது”

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.