சென்னை

ன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.