சென்னை

ன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல்  இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்தது. சென்னையில் விடிய விடியப் பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கியது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.  இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு அதிக அளவு மழை இல்லை. இதனால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இன்று இயங்கும் என ஆட்சியர்  அறிவித்து உள்ளார். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று பள்ளி விடுமுறை விடப்படவில்லை என ஆட்சியர் அறிவித்து உள்ளார். இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.