டில்லி

ன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துப் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர்  இ.சி. அகர்வலாவும், விசாலாட்சி சார்பில் வழக்கறினர் புல்கித் தாரேவும் மேல்முறையீட்டு மனுக்களைக் கடந்த 3 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும், வயது மூப்பைக் கருத்தில் கொண்டு சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு உள்ளது.

பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.