க்னோ

ரும் 22 ஆம் தேதி அன்று பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் வரும் 22 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.