சென்னை

ன்று தமிழகத்தின் 10 மவாடங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைபெய்து வருகிறது.  வரும் 26 ஆம் தேதி அன்று அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  ஏற்கனவே தெரிவித்துள்ளது..

இந்நிலையில் இன்று தமிழகத்தின் 10 மாவடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.