சென்னை

ன்று தமிழ்கம முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி உள்ளது.

உலகை மிகவும் அச்சுறுத்தி வந்த போலியோ என்னும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்க போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.   இந்த மருந்தை நாடு முழுவதும் இலவச முகாம்கள் அமைத்து அரசு இலவசமாக அளிக்கிறது.   இதனால் தற்போது போலியோ இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒ ந்றாக உள்ளது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.  இதையொட்டி தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்றைய முகாமில் போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசின் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் 43,500 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இதில் சென்னையில் 1,647 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி உள்ள இந்த முகாமில் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.

எனவே மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த முகாமில் சொட்டு மருந்து போட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  அத்துடன் இன்று சொட்டு மருந்து போட முடியாத குழந்தைகளுக்கு அடுத்த 3 நாட்களுக்குள் மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன