ரோடு

ன்றுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது.

கடந்த 7 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவித்தது. அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவுபெறுகிறது.

இன்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாகும். எனவே இன்று தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

வேட்புமனு நாளை பரிசீலனை நடைபெற உள்ளது.. வரும் 20 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அன்று இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவும், 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.