சென்னை

ன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவ்வகையில் இன்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்,

“தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு இடமளிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் இரண்டிலும் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயக்கப்படும் ரயில் சேவைக்குப் பதிலாகக் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். 

வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 08:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேற்கண்ட அட்டவணை மாற்றம் 25-02-2024-க்கு மட்டுமே பொருந்தும்” 

என்று தெரிவித்துள்ளது.