நாகப்பட்டினம்

ன்று வேளாங்கண்ணி  திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா ஆகஸ்டு 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று இரவு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது. இந்த தேர் பவனியின்போது திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாதா தேர் மீது பூக்களை வீசி ‘மரியே வாழ்க’ என கோஷம் எழுப்பி மாதாவை வேண்டிக் கொண்டனர்.

இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 23 ஆம் தேதி இந்த விடுமுறையை ஈடு செய்ய வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.