கொடைக்கானல்

ன்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

வரும் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த உத்தரவுக்கு கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுலாப்பயணிகள் கோடை விடுமுறை தொடங்கிய நாளில் இருந்து அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கொடைக்கானல் வர இ-பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இ பாஸ் பெறுவதற்கான வழி முறைகள் எதுவும் சரியாக அறிவிக்கபடவில்லை.  எனவே இந்தக் குழப்பத்தால் விடுமுறை தினமான இன்று கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.