திருவண்ணாமலை

ன்று திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் நடைபெற உள்ளது.

கிரிவலப் பாதை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி அமைந்துள்ளது.  சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உடைய கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இப்பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் கிரிவலப்பாதையில் 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தைத் தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நாளை கார்த்திகை மாதம் சிவராத்திரி என்பதால் குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. மாலை 4.30 முதல் 6 மணி வரை குபேர கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி இன்று கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் வரிசையாகச் சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.