திருச்சி

பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்

 

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வரும் 9, 10 மற்றும் 3, 14 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி 39 நாடாளுன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இன்று பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, கேரளாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு ஜே.பி.நட்டா நேற்று  இரவு வருகை தந்து, நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுத்தார்.

இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சிதம்பரம் செல்லும் அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் சென்று, கரூர் பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, விருதுநகர் சென்று அங்கு, பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, அவர் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

பிறகு திருச்சிக்கு வந்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாகனப் பேரணி சென்று வாக்கு சேகரித்த பிறகு இரவு7 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.