கடலூர்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று கடலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்று சிதம்பரம், மயிலாடுதுறை தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நடத்திய பிரசாத்தில் கடலூர் பொதுக்கூட்டத்தில்,

”மக்களுக்கு ’இந்தியா’ கூட்டணி மேல் நம்பிக்கை உள்ளது. நாட்டின் தென்கோடி முனையில் உள்ள திமுக சொல்வதை அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வழங்கியுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்குச் சமூக நீதி மீது அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை மருந்துக்கு கூட நினைப்பது இல்லை. சமத்துவத்திற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. 

மோடிக்கு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவைப் பிடிக்கவில்லை. மோடி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பகையாளி இந்தியாவாக மாற்ற துடிக்கிறார். மோடியின் பாஜக மீண்டும் ஆட்சி ஆஇத்தால் இந்தியவில் ஜனநாயகமே இருக்காது.  இப்படி ஒரு பிரதமர் நமக்கு தேவையா?  

எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.விற்கு எதிராக பொய் பேசி அ.தி.மு.க.வில் உழைத்து உயர்ந்தேன் எனச் சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சிலர் முதுகிலே சவாரி செய்து பதவி வாங்கி அவர்களுக்கே துரோகம் செய்தவர். எஉக்கு அதிகமாக கப்பம் கட்டுபவரே அ.தி.மு.க.வில் தலைவராக இருக்க முடியும். இந்தியாவிற்கு உலக அளவில் அழிக்க முடியாத அவமானத்தைத் தேர்தல் பத்திர ஊழல் கொடுத்துள்ளது” 

என்று உரையாற்றி உள்ளார்.