சென்னை

மிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் கடந்த 2 தினங்களாக திடீர் எனப் பெய்த கனமழை காரணமாக மக்கள் பெரிதும் துயர் அடைந்தனர்.   நகரில் பல இடங்களில் ,மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  இதையொட்டி அந்த இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது.   நேற்று மழை பெய்யாததால் மக்கள் சிறிது நிம்மதி அடைந்தனர்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் தென் மாவட்ட கடற்கரையை ஒட்டி, 5.8 கி.மீ., உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்து வருகிறது.  

இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை தென் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெயலாம்.  பிறகு அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை காணப்படும்.

தலை நகர் சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.  ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன்சேலானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று  குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம்.”

என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.