நாமக்கல்

ன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டுள்ளன.

புராணங்கள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார் என  தெரிவிக்கின்றன.  இதன்படி,இன்று 2.1.22 அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் தொடுக்கப்பட்ட மாலைகள் சார்த்தப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

இந்த விழாவில் மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

ஆஞ்சநேயரை கொரோனா கட்டுப்பாடுகளோடு ஆஞ்சநேயரைத் தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 300 பேர், இலவச தரிசன முறையில் 200 பேர் என ஒருமணி நேரத்திற்கு 500 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.