சென்னை

இன்று 100 பேருந்துகளுடன் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடந்தது.

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது .

இங்கு வெளியூர் செல்லும் பேருந்துகளை நிறுத்தக் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இங்கு காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 100 பேருந்துகள் இயக்கப்பட்டு முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. விரைவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.