செங்கல்பட்டு

இன்று சென்னை – மதுரை இடையே செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் சுமார்  1.50 மணி அளவில் சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பியது. இந்த ரயில் தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு நோக்கி ரெயில் சென்று கொண்டிருந்தது,

அபொஈட்க்ய், டி1 பெட்டியில் பயணி ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்ற போது, மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை எழுந்தது. பயணிகள் இதனால் அச்சமடைந்த பயணிகள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு தீயணைப்பான் மூலம் கரும்புகை அணைக்கப்பட்டது. பிற்கு செங்கல்பட்டு ரெயில் நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு மதுரை நோக்கி சென்று கொண்டு உள்ளது.