டெல்லி:
த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி, கடந்த மே 12ம் தேதி மக்களிடையே ஆற்றிய தொலைக்காட்சி உரையின்போது, நாட்டின்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்’ என்றார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 13ந்தேதி முதல் மத்திய நிதி அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
13ந்தேதி அறிவித்த, முதல்கட்ட அறிவிப்பில், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.
14ந்தேதி அன்று அறிவித்த, 2ம் கட்ட அறிவிப்பில் ஊரடங்கால் கடுமையாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும்  திட்டங்கள், மற்றும் சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், சிறு தொழில் புரிவோருக்கு சம்பளம், கடன், சலுகைகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு 3வது கட்டமாக மீண்டும் நிருபர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது மேலும் பல்வேறு சலுகைகளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.