சென்னை

இன்று தொழிலாளர் தினம் என்பதால் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயங்க உள்ளன.

இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய விடுமுறை என்பதால் மின்சார ரயில்கள் ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் எனவும், முன்பதிவு மையங்கள் பகுதி நேரம் மட்டும் இயங்கும் எனவும் தெற்கு ரெ\யில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே இதுகுறித்து,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

இதேபோல, பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்”.

என்று கூறப்பட்டுள்ளது.