தர்மபுரி

இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் மு க ஸ்டாலின் தர்மபுரிக்கு வருகிறார்.

இன்று காலை 10 மணிக்குத் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சேலம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். விழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது. பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.

மேலும் ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி விழா பேருரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்தியநாதன், கூடுதல் ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்., சடடமன்ற றுப்பினர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.