சென்னை

ன்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகம் எங்கும் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகச் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன.   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் பல மாணவர்கள் வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  எனவே இவர்களுக்குப் பள்ளி சென்று வர வசதியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. எனவே இந்த திட்டம் கடந்த இரு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமல் இருந்தது.   நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு மீண்டும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி உள்ளது.   இந்த திட்டத்தின் மூலம் சுமார் 12 லட்சம் பேர் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

இன்று சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் இந்த திட்டத்தைத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.  இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 11 ஆம் வகுப்பு படிக்கும் 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.