சென்னை

ன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்வி சுக்லா பதவி ஏற்க உள்ளார்

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்கு மாறு, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்று,மத்திய அரசு ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்தது. எனவே எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

இன்று காலை 10 மணிக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவியேற்கிறார்.  ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிழச்சியில் அவருக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.

மராட்டிய மாநிலத்தில் கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கி 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து அடுத்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி இவர் ஓய்வு பெறுகிறார.