சென்னை

ன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்கக்கோரித் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்து வந்தார். அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக 8 மாதங்களாகச் செயல்பட்டு வந்தார்.நேற்று முன் தினம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு செந்தில் பாலாஜி அனுப்பினார். முதல்வர் அந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார். ஆளுநர் ஆர் என் ரவி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒப்புதல் வழங்கினார்.

இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றங்களில் அமலாக்கத்துறை அமைச்சராக இருப்பவர் வெளியில் வந்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைப்பார் என்று வலியுறுத்தி வந்தது.

தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். எனவே அதனை ஒட்டி ஜாமீன் மனு மீதான விசாரணையில் தனது வாதங்களை செந்தில் பாலாஜி தரப்பினர் முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.