சென்னை

ரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என தலைமிஅச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஜாக்டோ ஜியா அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும் வரும் 15 ஆம் தேதி (நாளை)  அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்

இதையொட்டி தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அனைத்து துறை செயலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒர் அவசரக் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில்,

“நாளை தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். 

அரசு ஊழியர்கள் தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ள் ஈடுபடவோ அல்லது ஈடுபடப்போவதாகவோ பயமுறுத்தக்கூடாது. 

அரசு விதிகளை மீறியதாக அது அமைந்துவிடும். ஆகவே, இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் .

வரும் 15 ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலோ அல்லது இந்த சங்கத்தினர் நிர்ணயிக்கும் வேறு தேதியில் வரவில்லை என்றாலோ அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருதி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். 

போராட்டம் நடைபெறும் 15 ஆம் தேதி மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புக்கள் அளிக்கக்கூடாது. ஆகவே அன்றைய தினம் காலை 10.15 மணிக்குள் உங்கள் துறையில் உள்ள பணியாளர்களின் வருகை பற்றி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.