சென்னை

ன்றும் தமிழகம் முழுவதும் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

நேற்று முதல் தங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதையொட்டி தமிழக அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

எனவே திட்டமிட்டபடி பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். ஆனால் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய போதிலும் தமிழகம் முழுவதும் பேருந்துகள் நேற்று வழக்கம்போல் ஓடின. தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இன்றும் போக்குவரத்து ஊழியர்கள் 2 ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 100.62% பேருந்துகள் இயக்கம் இயக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும்,

”சென்னையில் 111.75% பேருந்துகளும், விழுப்புரம் 97.77%, சேலம் 97.24%, கோவை 94.04%, கும்பகோணம் 98%, மதுரை 98.71%, நெல்லை 100%, மதுரை 99.07% பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது, பேருந்துகள் சீராக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.” 

என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.