சென்னை

ன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

கடந்த 6 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு வெளியாகிறது.

இம்முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தாலும் அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எந்தவித கட்டணமுமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். தவிர மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.