சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி நடக்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே தமிழகம்முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்கௌக்கான செமஸ்டர் தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்து இருந்ததை தற்போது ரத்து செய்துள்ளது.  மாறாக அந்த தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் மக்களைவ தேர்தல் வாக்க்கள் வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன.  இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கல் பெருபாலும் பொறியியல் கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் செல்ல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதிகள் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன  எனவே பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஜூன் 6 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.