சென்னை:

மிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பத்திவர்களுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம்  மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி  நடத்தி வருகிறது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குருப்-4க்கான காலி பணியிடங்கள் மற்றும் தேர்வு விவரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு, இதுவரை இல்லாத  வகையில் 21 லட்சம் பேர்  விண்ணப்பித்து உள்ளனர்.

இந்நிலையில், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை தேர்வாணைய  இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.