சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  டிஎஸ்பி,  டெப்டி கலெக்டர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது முதல் நிலை தேர்வு ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 90 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி,   துணை ஆட்சியர் – 16, துணை காவல் கண்காணிப்பாளர் – 23, உதவி ஆணையர் வணிக வரி – 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்-21, உதவி இயக்குனர்(ஊரக வளர்ச்சி)- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் மற்றும் மாவட்ட தீய்ணைப்பு அலுவலர் தீயணைப்பு ஒருவர் என மொத்தம் 90 காலி இடங்களுக்கு தேர்வுகள் மூலம் பணி நியமனம் செய்யப்படும் என்று  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக, தேர்வர்கள் மார்ச் 28 இன்று முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் முதல்நிலை எழுத்துத் தேர்வு 13.07.2024 அன்று நடைபெறும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதமே இதுதொடர்பான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி,  TNPSC குரூப் 1 தேர்வு மார்ச்சில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது. அதன்படி, இன்று தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.