சென்னை: 
நவ.1லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனாநோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் ஒன்றாம் தேதி  முதல் நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான முன்னேற்பாடுகளைப் பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.