சென்னை

ரும் மக்களவையில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில்,

”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (15.03.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூறுமுகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கீழே தரப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள் 18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான தோழர் சு.வெங்கடேசன்., அவர்களையும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களையும் வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” 

என்று பதிவிட்டுள்ளார்.