சென்னை 

கைச்சுவை நடிகர் எஸ் வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பத்திரிகையாளர் இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். ஆயினும் இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை சட்டமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர்  மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. . எஸ் வி சேகர் தரப்பில், அபராத தொகையைச் செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது..

உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் மேல்முறையீட்டு மனு மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதீமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது. எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதுடன். எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவிற்குச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்கவும்  உத்தரவிட்டுள்ளார்.