சென்னை

றைந்த நடிகர், இயக்குநர் மனோபாலாவுக்கு தமிழக அரசியல் தலைஅர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மனோபாலா இன்று மரணம் அடைந்தார்.   சென்னையில் காலமான இவருக்கு வயது 69 ஆகிறது.   கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்சினை காரணமாக மருஹ்துவ்மனையில் அனுமதிக்கப்பட்ட மனோ பாலா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்/   அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்/.

முதல்வர் ஸ்டாலின்: “சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

எடப்பாடி பழனிசாமி: “ மனோபாலா `ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் மனோபாலா, அதிமுகவின் மீதும், தொடர்ந்து கட்சித் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கட்சியின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்.”

கே.எஸ்.அழகிரி: “பத்திரிகையாளராக தமது வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக இணைந்து, திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மிகச் சிறப்பாக திரைப்படத் துறையில் பங்காற்றிய மனோபாலா காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 20 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி, ஏறத்தாழ 175 திரைப்படங்களில் நடித்துள்ள மனோபாலாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்”.

திருநாவுக்கரசர்“திரையுலகில் இயக்குனா் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்து அனுபவம் பெற்று பல படங்களை இயக்கியும், நடிகராக பல படங்களில் நடித்தும், தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பொியவர்கள் வரை அனைவாின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்தவா். மிகவும் இயல்பானவா். அனைவாிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் மனோபாலா. அன்னாாின் மறைவு திரையுலகிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் இழப்பாகும்”.

விஜயகாந்த்: “எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”

இதை போல் சீமான்,  சரத்குமார், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.