திருவனந்தபுரம்

மிழக ஐயப்ப பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

தற்போது வழக்கத்தை விட மிக அதிகமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.  இதனால் பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்கப் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி கேரள உயர்நீதிமன்றத்துக்குத் தமிழக ஐயப்ப பக்தர்கள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.

அந்த மின்னஞ்சலில்,

”நிலக்கல் முதல் பம்பை வரை பக்தர்களை காவல்துறையின் உதவியுடன் பேருந்துகளில் ஏற்ற வேண்டும்.

ஒரு பேருந்தில் அதிகபட்சமாக 80 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்..

குழந்தைகள், வயதான பெண்களுக்குச் சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும்

பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்குத் தண்ணீர், உணவு வழங்க வேண்டும்.

சுகாதாரமான உணவு தயாரிப்பை உறுதி செய்ய வேண்டும்.

சபரிமலையில் மருத்துவ வசதியை அதிகரிக்கவேண்டும்.”

எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.