சென்னை

தமிழக அரசு இந்த வருடத்துக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு  ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு  ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் ஆகும்.  நேற்று இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில்,

”தைப்பொங்கல் 2024 aamம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.1,000 ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்க பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.