சென்னை

ல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ரகளை செய்வதைத் தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் பொறுப்பாளர்களை நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களில் பலர் பேருந்து பயணம் செய்து வருகிறனர்.  இவர்களில் சிலர் பேருந்துகளில் ரகளை செய்வது கூரை மேல் ஏறி பயணம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.  இது மற்ற பயணிகளுக்குத் தொல்லை தருவதுடன் மாணவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக அரசு உயர் கல்வித்துறை மற்றும் தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் கல்லூரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,

“கடந்த சில காலங்களாக மாணவர்கள் கல்லூரி வரும் போது பேருந்துகளில் ரகளை செய்வதும் கூரை மீது ஏறி பயணம் செய்வதும் மிகவும் அதிகரித்துள்ளன.  இதைத் தடுக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி பேருந்து படிக்கட்டு மற்றும் ஜன்னல்களில் தொங்குவது, ரகளை செய்வது, கூரைகளில் ஏரி பயணம் செய்வது போன்றவற்றில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும்.  இந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து உளவியல் கவுன்சிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி  இத்தகைய செயலில் இருந்து விலகி கல்வியில் முன்னேறத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும்.  இந்த நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு கல்லூரியில் ஒரு பொறுப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும்.”

என உத்தரவிடப்பட்டுள்ளது.