சென்னை

ச்சநீதிமன்ற அறிவுரையின்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதையொட்டி தமிழகத்தில் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, அவர் ஒப்புதலுக்காகக் கடந்த மாதம் 18-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 19 ஆம் தேதி மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்தார். காலத்தை வீணடிப்பதற்காகவே ஆளுநர் இவ்வாறாகச் செயல்படுகிறார் என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கு கடந்த 1 ஆம் தேதி வழக்கு  விசாரணைக்கு வந்தபோது மசோதாக்கள் விவகாரத்தில் முதல்வரை அழைத்து இது குறித்து ஆளுநர் விவாதிக்க வேண்டும் என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்குப் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

எனவே நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் குறித்துப் பேச முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். தற்போது சென்னையில் புயல், மழை பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வரும் நிலையில், வேறு ஒருநாள் சந்திப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.