சென்னை

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. நாடெங்கும் உள்ள பல இந்து அமைப்புக்கள் மற்றும் பாஜகவினர் இதை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ‘எக்ஸ்’ தளத்தில்,

“நாட்டு மக்கள் தற்போது ராம பக்தியில் மூழ்கியுள்ளனர். தமிழகத்துச் சகோதர, சகோதரிகள் மத்தியிலும் இதை நான் பார்க்கிறேன்,  மற்றும் உணர்கிறேன். 

பகவான் ஸ்ரீ ராமர் பாரதத்தின் தேசிய சின்னம்.  ஜனவரி 22-ந்தேதி அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவின் மூலம் தேசத்திற்கு ஒரு அற்புதமான ராமர் கோவில் கிடைக்கப் பெறும். 

ஒட்டு மொத்த தேசமும் இந்த வரலாற்றுத தினத்தை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றிக் கொண்டாடும். இன்று தமிழகத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன் தீபம் ஏற்றிக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” 

என்று பதிவிட்டுள்ளார்.