சூடான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி நேற்று முதல் தீவிரமாக நடைபெறுகிறது.

இங்கு சிக்கியுள்ள 400 தமிழர்கள் மற்றும் அனைத்து இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சூடான் துறைமுகத்தில் இருந்து கடற்படை கப்பல் மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் இந்தியர்கள் 534 பேர் சவுதி அரேபியாவின் ஜெத்தா விமான நிலையம் வந்தடைந்தனர்.

இவர்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் சென்னையிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்துள்ளது.

டெல்லி கட்டுப்பாட்டு அறையை 011-2419 3100, 9289516711 எண்களையும், tnhouse@nic.in என்ற மின்னஞ்சலையும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என்றும் சென்னையில் கட்டுப்பாட்டு அறையை :+91-9600023645, nrtchennai@gmail.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.