சென்னை

ள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.   இதையொட்டி அதிகரிஅக்ள் இடமாற்றம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனைத்து மாவட்ட தேர்தல் ஆணையர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி சொந்த ஊர் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளனர்.   அத்துடன் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இந்த சுற்றறிக்கையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், நியமன அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.